நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சவுராஷ்டிரா முன்னேற்ற பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். 2026 சட்டசபை தேர்தலில் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசியல் பிரநிதித்துவம் பெறுதல், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்துவலியுறுத்தப்பட்டது. பிற கட்சிகள் பிரதிநிதித்துவம் தராவிடில் சுயேட்சையாக 4 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விவாதித்தனர்.
துணைத் தலைவர் ஷர்மிளா, பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் பாலகுமார், நிர்வாகிகள் ஷகிலா, ஹரிந்திரன், ஓம் குமார், சாரதி பங்கேற்றனர்.

