ADDED : ஜூலை 12, 2026 02:05 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டம் வில்லுார் அருகே கவசக்கோட்டை திருப்பதி39, மனைவி பாக்கியலட்சுமி 30. தங்களது தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருள் பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர்.
அவர்களிடமிருந்து 100 கிலோ வெடிபொருட்கள், பட்டாசு தயாரிக்க பயன்படும் 2000 பட்டாசு குழாய்களை வில்லுார் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டியில் இவர்கள் நடத்திய பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்த னர். அங்கிருந்த வெடிபொருட்களை சொந்த ஊரான கவசக்கோட்டைக்கு கொண்டு வந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர்.
