sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறை கைதி மீது தாக்குதல் சி.பி.சி.ஐ.டி., விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

/

சிறை கைதி மீது தாக்குதல் சி.பி.சி.ஐ.டி., விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறை கைதி மீது தாக்குதல் சி.பி.சி.ஐ.டி., விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறை கைதி மீது தாக்குதல் சி.பி.சி.ஐ.டி., விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 12, 2025 05:34 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருச்சி மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை அங்கம்மாள் தாக்கல் செய்த மனு: என் மகன் ஹரிகரசுதன். போதைப்பொருள் வழக்கில் அவருக்கு 2024ல் மதுரை சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மதுரை மத்திய சிறையில் மகன் அடைக்கப்பட்டார். அவர் 10 வது வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார்.

ஐ.டி.ஐ., படிப்பதற்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை ஜூலை 26 ல் சிறை அதிகாரி ஒருவர் தாக்கினார். மகன் காயமடைந்தார். மகனை அவரது வழக்கறிஞரிடம் பேச அனுமதிக்கவில்லை. மகனை தனிமைச் சிறையில் அடைத்தனர். மனித உரிமை மீறல் நடந்துள்ளது.

தாக்குதலுக்கு காரணமான சிறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், சிறைத்துறை டி.ஜி.பி., திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் புகழேந்தி ஆஜரானார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் 2 வெவ்வேறு வழக்குகள் பதிந்துள்ளனர். அவை திருச்சி சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் விசாரணைக்கு மாற்றப் படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us