sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை

/

மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை

மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை

மதுரை சிறையில் கோழிப்பண்ணை பொதுமக்களுக்கும் கறி விற்பனை


ADDED : பிப் 20, 2025 05:39 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மத்திய சிறையில் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவுப்படி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகளை இறைச்சியாக்கி புதன், ஞாயிறு அன்று கைதிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் சிறை நிர்வாகத்திற்கு செலவினம் குறைந்துள்ளது.

தற்போது 6 குடில்கள் அமைக்கப்பட்டு தலா 1300 கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 20 கைதிகள் பராமரித்து வருகின்றனர். பொதுமக்களும் சிக்கன் வாங்கும் வகையில் சிறை வளாகத்திலேயே கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் கோழியாக உற்பத்தி செய்து இறைச்சியாக்கப்பட்டு கைதிகளுக்கு தலா 150 கிராம் வழங்கப்படுகிறது.

மதுரை சிறைக்கு மட்டும் நேற்று 340 கிலோ இறைச்சி வழங்கப்பட்டது. மாவட்ட சிறைகளுக்கு தலா 40 கிலோ வரை வழங்கப்பட்டது.

சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''மதுரை சிறை, பெண்கள் சிறை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் சிறை கைதிகளுக்கும் கறி வழங்கப்பட்டது.

கோழிகளை கண்காணிக்க கால்நடை டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., முருகேசன் மேற்பார்வையில் கூடுதல் எண்ணிக்கையில் கோழி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us