/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர் காப்பீடு செய்ய நவ.30 கடைசி
/
பயிர் காப்பீடு செய்ய நவ.30 கடைசி
ADDED : நவ 23, 2025 04:01 AM
வாடிப்பட்டி :வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் சிறப்பு ராபி பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் பாண்டி அழைப்பு விடுத்துள்ளார்.
சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புக், ஆதார் அட்டை கொண்டு இ சேவை மையம் மூலம் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
தேசிய, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகை கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். கட்டணத்தை தேசிய வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தலாம். நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.540 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.

