sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குன்றத்து கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

/

 குன்றத்து கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

 குன்றத்து கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

 குன்றத்து கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு


ADDED : டிச 01, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா 6ம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர்.

சைவ சமய வரலாற்று லீலையையொட்டி வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவலிநாயகர், திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர்.

அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் ரதவீதிகளில் புறப்பாடாகி அருள்பாலித்தனர்.

இன்று (டிச. 1) காலையில் கங்காள நாதர் சுவாமி புறப்பாடும், மாலையில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்மன், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். டிச. 2ல் பட்டாபிஷேகம், டிச. 3 காலையில் தேரோட்டம், மாலையில் மலை மேல் மகா தீபம், 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை காட்சி நடைபெறும்.






      Dinamalar
      Follow us