ADDED : மார் 29, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை வடக்கு தாலுகாவயலுார் ஊராட்சி பிள்ளையார்நத்தத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த கடையில் உள்ள 2 அறைகளில் ஒன்றில் ஏற்பட்டுள்ள விரிசல்களில் குருவிகள் கூடு கட்டி வாழ்கிறது. மழைக்காலங்களில் மழை நீர் புகுந்து உணவுப் பொருட்கள் வீணாகின்றன. ரேஷன் பொருட்கள் வாங்க வருவோர் நிற்கும் பகுதி, முன்பக்க சிலாப் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இக்கட்டடம் மிகவும் சேதமடைந்து வருவதால் பொருட்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கடை கட்ட வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.