sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

/

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 19, 2024 05:05 AM

Google News

ADDED : செப் 19, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மெய்யணம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 55; ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அதே ஊரைச் சேர்ந்த உறவினர் கலுவன் குடும்பத்தினரின் இடத்தை 10 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு வாங்கி பிளை ஆஷ் கற்கள் தொழில் நடத்தி வந்தார்.

2 ஆண்டுகளான நிலையில் ஒத்தி வாங்கியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

செப். 16ல், கற்களை டிராக்டரில் எடுத்துச் சென்ற போது, கலுவன் தரப்பினர் தடுத்து தாக்கியதாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

கலுவன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதப்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டி நேற்று மாலை 6:00 மணியளவில் உசிலம்பட்டி டி.எஸ்.பி.. அலுவலகம் முன் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து ஜெயக்குமார் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ஒத்தி தொடர்பாக நீதிமன்றம் மூலமாக தீர்வு காணும்படி கூறி டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us