sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பைபாஸ் ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்

/

பைபாஸ் ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்

பைபாஸ் ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்

பைபாஸ் ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்

1


ADDED : மார் 21, 2025 03:41 AM

Google News

ADDED : மார் 21, 2025 03:41 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை விடுத்த எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அதிகாரிகளும் கண்துடைப்பாகவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவான பைபாஸ் ரோட்டின் இருபுறமும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்துள்ளன. வைகை ஆற்றுப்பாலம் முதல் போடிலைன் ரயில்வே மேம்பாலம் வரை இருபுறமும் ஏராளமான கடைகளால் தினமும் 'பீச்' போல களைகட்டி வருகிறது. நெடுஞ்சாலை, போலீஸ், மாநகராட்சி நிர்வாகங்கள் அவ்வப்போது கண்துடைப்பாக நடவடிக்கை மேற்கொள்வதோடு சரி.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாகவும், அதற்கு முன் கடைக்காரர்களே அகற்றிக் கொள்ளாவிடில் நடவடிக்கை பாயும் என்றும் நெடுஞ்சாலைத் துறை 2 நாட்களுக்கு முன் வீராப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. கடைக்காரர்கள் பதறிப்போவர் என்று பார்த்தால், யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

பெத்தானியாபுரம் பகுதியில் புல்டோசருடன் வந்த நெடுஞ்சாலை, போலீசார், மாநகராட்சியினர் பெயருக்கு சில கடைகளை உடைத்தனர். அருகிலேயே இருந்த அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளவில்லை. அதேநிலைதான் பொன்மேனி, போடிலைன் பகுதி வரை இருந்தது. பிரியாணி கடைகள், வடை கடைகள், குளிர்பான, பழச்சாறு கடைகள் என எதுவும் நேற்று மாலைவரை அசையவே இல்லை.






      Dinamalar
      Follow us