ADDED : ஜன 12, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் திருமங்கலம் உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் நடந்தது. இதில் சிவாச்சாரியார், பாதிரியார், முஸ்லிம் சமுதாயத்தினர் பொங்கல் வைத்தனர். ஏற்பாட்டை கவுன்சிலர் ரம்ஜான் பேகம், வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் செய்திருந்தனர். நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, கவுன்சிலர்கள் சின்னச்சாமி, அசாவுருதீன் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி: நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். தலைமை ஆசிரியர் மதன்பிரபு வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் தேவி ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்தனர்.

