ADDED : அக் 28, 2025 05:07 AM
மதுரை: பயணியர் வசதிக்காக கீழ்க்காணும் ரயில்களில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட கூடுதல் பெட்டிகள் அடுத்தாண்டு ஏப்., வரை தொடர்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் 'சிலம்பு' (20681/20682), தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் (22657/22658) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 'ஸ்லீப்பர்' பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி 2026 ஏப்., 30 வரை தொடர்கின்றன.
பகுதி ரத்து பராமரிப்பு பணி காரணமாக அக்., 28 (இன்று) முதல் நவ., 1 வரை, மதுரையில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர், ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:40 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12:55 மணிக்கு புறப்படும். இரு ரயில்களும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

