/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோப்கார் இறுதிகட்ட சர்வே பணி திருப்பரங்குன்றத்தில் துவக்கம்
/
ரோப்கார் இறுதிகட்ட சர்வே பணி திருப்பரங்குன்றத்தில் துவக்கம்
ரோப்கார் இறுதிகட்ட சர்வே பணி திருப்பரங்குன்றத்தில் துவக்கம்
ரோப்கார் இறுதிகட்ட சர்வே பணி திருப்பரங்குன்றத்தில் துவக்கம்
ADDED : நவ 15, 2024 06:12 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் அமைப்பதற்காக சர்வே பணிகள் நேற்று துவங்கியது.
திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பதற்கான முதற்கட்டமாக கடந்தாண்டு கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் மலை மேல் ரோப்கார் அமைப்பது சம்பந்தமாக கருத்து கேட்பு நடந்தது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இரண்டாம் கட்டமாக 2023 ஆகஸ்டில் மலைக்குப் பின்புறம் மலை அடிவாரத்தில் ரோப் கார் அமைப்பதற்கான பகுதிகளில் சென்னை ஐடி காட் நிறுவனத்தினர் சர்வே பணிகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு ஆய்வு பணிகள் சில மாதங்களாக நடந்தது.
ஹரியானா ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனம் ரோப் கார் அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ஆகஸ்டில் ஆய்வு பணி முடிந்ததும் ரோப்கார் அமைக்க, கோயில் நிர்வாகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்த பேப்பர்கள் கோயில் மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
சர்வே பணிகள் துவக்கம்
பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகளை அடுத்து இறுதி கட்டமாக நேற்று சர்வே பணிகள் துவங்கியது. மூன்று நாட்கள் இப்பணிகள் நடக்க உள்ளது.
ஆர்.ஐ.டி.இ.எஸ்., பொது மேலாளர் சதீஷ்குமார் வர்மா தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மலை மேல் செல்லும் புதிய படிக்கட்டுகளின் அருகே ரோப்கார் அமைவுள்ள இடம், உயரம், இரும்பு கம்பிகள், ரோப்கார் செல்லும் நேரம், திரும்பும் நேரம், இடத்தின் அளவு, ஆரம்பிக்கும் இடம், மலை மேல் இறங்கும் இடம் உள்பட அனைத்து விவரங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.
இப்பணிகள் முடிந்ததும், இந்நிறுவனம் திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கும்.
அதன் பின்பு சில வாரங்களில் ரோப்கார் அமைக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.