sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு

/

தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு

தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு

தவிக்க விடும் அரசு பஸ்கள்; தினமும் நடக்குது தகராறு


ADDED : மார் 18, 2024 07:17 AM

Google News

ADDED : மார் 18, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் பஸ் ஸ்டாண்டுக்குள் பகல் நேரம் வந்து செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரத்தில் வராமல் பயணிகளை பரிதவிக்கவிட்டு செல்வதால், ஓட்டுனர்கள், பயணிகளிடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.

தேனியில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை, நாகர்கோவில், மார்த்தாண்டம் செல்லும் அரசு பஸ்கள், அப்பகுதியில் இருந்து தேனி, கம்பம், குமுளி பகுதிக்கு செல்லும் பஸ்கள் பேரையூர் பஸ் ஸ்டாண்டுக்குள் பகல் நேரத்தில் வந்து செல்கின்றன.

இரவு 10: 00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் ஒரு கி.மீ., முன்னதாகவே முக்குச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் பயணிகளுக்கும் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஆனாலும் டிரைவர், கண்டக்டர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விடுவதால் குடும்பத்துடன் பயணிப்போரும் இரவில் சிரமப்படுகின்றனர். ஊருக்குள் வர வாகனங்கள் கிடைக்காமல் குழந்தைகள் சகிதமாக நடந்தே வருகின்றனர். அப்போது நாய்கள் விரட்டுவதால் அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us