ADDED : டிச 11, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் டிச., 19ல் அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
அன்று அதிகாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. உலக நன்மைக்காக காலை 7:00 மணி முதல் சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. காலை 9:00 மணி முதல் பிரசாதம் வழங்கப்படும்.
இரவு 9:00 மணிக்கு மேல் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

