sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உண்மையை மறைத்து வழக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

/

உண்மையை மறைத்து வழக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

உண்மையை மறைத்து வழக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

உண்மையை மறைத்து வழக்கு உயர்நீதிமன்றம் அபராதம்


ADDED : அக் 30, 2025 04:16 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மோகன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை திருநகரிலுள்ள கட்டடம் தொடர்பாக மாநகராட்சி உதவி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். அது சட்டவிரோதமானது. அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு உத்தரவு: மனுதாரரின் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே வழக்கு தாக்கலானது. மாநகராட்சி தரப்பில், 'அங்கீகாரமின்றி கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. உண்மைகளை மறைத்து தற்போது மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இதை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us