/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டாக்டருக்கு கத்திக்குத்து குறித்து அவதுாறு; நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
டாக்டருக்கு கத்திக்குத்து குறித்து அவதுாறு; நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
டாக்டருக்கு கத்திக்குத்து குறித்து அவதுாறு; நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
டாக்டருக்கு கத்திக்குத்து குறித்து அவதுாறு; நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : நவ 27, 2024 07:32 AM
மதுரை,: சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி மீது கத்திக்குத்து நடந்தது குறித்து அவதுாறு கருத்துக்களை வெளியிடும் சில 'டிவி' சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் தாக்கல் செய்த மனு: புற்றுநோய் பாதித்த தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி விக்னேஷ் என்பவர் நவ.,14 ல் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினார். டாக்டர் காயமடைந்தார். இதை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். விக்னேஷின் தாய் மற்றும் அவரது உறவினர்களின் கருத்துக்களை சில தனியார் 'டிவி' சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஒளிபரப்பின. அதில் டாக்டர் பாலாஜிக்கு எதிராக அவதுாறான கருத்துக்கள் உள்ளன.
உண்மைகளை சரிபார்க்காமல் வெளியான இப்பேட்டிகள் பாலாஜி மற்றும் ஒட்டுமொத்த டாக்டர் சமூகத்தின் மீதான நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலருக்கு புகார் அனுப்பினேன். அவதுாறு கருத்துக்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. தடுப்பது அரசின் கடமை. சம்பந்தப்பட்ட 'டிவி' சேனல்கள், சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜன.,7 க்கு ஒத்திவைத்தார்.