sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கட்டப்பஞ்சாயத்து போலீசார் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கட்டப்பஞ்சாயத்து போலீசார் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டப்பஞ்சாயத்து போலீசார் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டப்பஞ்சாயத்து போலீசார் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : செப் 05, 2025 04:00 AM

Google News

ADDED : செப் 05, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் சட்ட விரோதமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக உறுதியானால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை சசிகுமார், ரம்யா. இவர்கள் ஒருவரிடம் மருந்து கொள்முதல் செய்தனர்.

அதற்குரிய பில் தொகை ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்து 59 செலுத்தத் தவறியதாக திலகர் திடல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சசிகுமார், ரம்யா முன்ஜாமின் கோரி உயர்நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன்: போலீசில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி தொகையை செலுத்த கட்டாயப்படுத்தினர். மனுதாரர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 400 செலுத்தியுள்ளனர் என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் தரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் போலீசில் சமரச பேச்சு நடந்ததை அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு வணிக பரிவர்த்தனையில் போலீஸ் தரப்பில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.

இப்புகார் ஒரு குற்றவியல் வழக்கிற்குரியதா என்பதை மதுரை போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) உறுதிப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக உறுதியானால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களுக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us