sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

/

யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்


ADDED : ஏப் 16, 2025 05:40 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை யா.புதுப்பட்டி அரசு தொழுநோய் மையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தாக்கலான வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மூகாம்பிகை தாக்கல் செய்த பொதுநல மனு: யா.புதுப்பட்டியில் அரசு தொழுநோய் மறுவாழ்வு மையம் உள்ளது. தொழுநோயாளிகளுக்கு புண்களை சுத்தம் செய்து மருந்திட்டு பேண்டேஜ் கட்ட வேண்டும். நோயாளிகளே அப்பணியை செய்கின்றனர். அப்பணிக்குரிய ஊழியர்கள் உதவி செய்வதில்லை. நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க போதிய சமையலர்கள் இல்லை. போதிய கழிப்பறை, மின்சார வசதி இல்லை.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். சமையலர், காப்பாளர், எலக்ட்ரீசியன், பிளம்பர், துாய்மை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு சுகாதாரத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி தற்போதைய நிலை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us