/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயணம்
/
மாணவருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயணம்
ADDED : டிச 06, 2025 05:52 AM
உசிலம்பட்டி: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக கல்லுாரி களப்பயணம் மூன்று நாட்கள் கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் நடந்தது.
செக்கானுாரணி, முள்ளிப்பாளையம், அய்யநாயக்கன்பட்டி, மேலக்கால், நாட்டாமங்கலம், பாப்பாபட்டி, வடக்கம்பட்டி, விக்கிரமங்கலம், கோவிலாங்குளம், தும்மக்குண்டு, வி. கள்ளபட்டி அரசு மேல் நிலைப் பள்ளிகள், கருமாத்துார் புனிதகிளாரட் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
துவக்க விழாவில் கல்லுாரி முதல்வர் அன்பரசு வரவேற்றார். அதிபர் பேசில் சேவியர், வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் உயர்கல்வி, தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள், பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்புகள், அரசு மாணவர்களின் உயர்கல்விக்கான சலுகைகள், அரசு, தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர். இணை முதல்வர் சுந்தரராஜ் நன்றி கூறினார். துணை முதல்வர் பாஸ்கரன், பேராசிரியர் நிர்மல்ராஜ்குமார் ஒருங்கிணைத்தனர்.

