/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
/
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : அக் 12, 2024 12:06 AM

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 1199 கன அடியிலிருந்து 2099 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு செப். 15ல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போகத்திற்கு அக். 6ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது. இதனால் தற்போது அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 1130 கனஅடியில் இருந்து 2030 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 55.64 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 1230 கன அடி.