sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தாயமங்கலம் கோயிலில் ரூ.11.16 கோடியில் வசதி' உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

தாயமங்கலம் கோயிலில் ரூ.11.16 கோடியில் வசதி' உயர்நீதிமன்றத்தில் தகவல்

தாயமங்கலம் கோயிலில் ரூ.11.16 கோடியில் வசதி' உயர்நீதிமன்றத்தில் தகவல்

தாயமங்கலம் கோயிலில் ரூ.11.16 கோடியில் வசதி' உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : அக் 12, 2025 05:21 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.11 கோடியே 16 லட்சத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு சாலைக்கிராமம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா நடைபெறும். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருவர். அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், குளியலறை, தங்கும் விடுதி, முடி காணிக்கை செலுத்தும் அறை, திருமண மண்டபம், ஆடு வதைக்கூடம், சமையல் கூடம், வாகன நிறுத்தும் வசதி இல்லை. வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வசந்தகுமார், கோயில் நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்.

அரசு வழக்கறிஞர் அசோக்,''கோயிலில் ரூ.11 கோடியே 16 லட்சத்தில் மேம்பாட்டு பணி மேற்கொள்ள அறநிலையத்துறை கமிஷனருக்கு நிர்வாக அனுமதியை அரசு வழங்கியுள்ளது,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள்,'பணி சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது கோயில் நிர்வாகம், அதிகாரிகளின் கடமை. வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us