sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டிகள்

/

கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டிகள்

கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டிகள்

கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டிகள்


ADDED : பிப் 06, 2025 05:54 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை பாத்திமா கல்லுாரியில் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை சார்பில் 'இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களின் மறுமலர்ச்சி, பாதுகாப்பு' என்ற தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டி நடந்தது.

முதல்வர் செலின் சஹாய மேரி தலைமை வகித்தார். ஆராய்ச்சி டீன் கலா வரவேற்றார். 2024ல் ஆராய்ச்சி பிரிவில் அதிக புத்தகம் வெளியிட்ட பேராசிரியர்கள் சுகன்யா, கலா, பூர்ணிமா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசாக ரூ. 5 ஆயிரம், ரூ. 3500, ரூ. 2 ஆயிரம் வென்றனர்.

போட்டியின் இறுதிச்சுற்றில் பாத்திமா கல்லுாரி பிரிவில் 5 குழுவும், மற்ற கல்லுாரிகள் பிரிவில் 5 குழுவும் பங்கேற்றன. பேராசிரியர்கள் கிறிஸ்டோபர் ரமேஷ், ஜெயச்சந்திரா, ஷீலா நடுவர்களாக பங்கேற்றனர். நாட்டுப்புறக் கலைகள், மதுபானி கலை, வார்லி ஓவியங்கள், நெசவுக் கலை, கால்நடைகளுக்கான பழங்கால மருத்துவம், மண்ணிலும் களிமண்ணிலும் உள்ள பாரம்பரிய கலை, வளரி ஆயுதக் கலைஉள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி குறிப்புகளை விளக்கினர்.

பாத்திமா கல்லுாரி பிரிவில் பாத்திமா நஸ்ரின், குகஸ்ரீ, ஷாஹின் பேகம் முதல் பரிசு, லாவன்யா, சிவரஞ்சனா, தியானா சல்ஹா 2ம் பரிசு, நாகலட்சுமி, தனலட்சுமி, சுரேகா 3ம் பரிசு வென்றனர். மற்ற கல்லுாரிகள் பிரிவில் லேடி டோக் கல்லுாரி எஸ்தர், ஹரிணிஸ்ரீ முதல் பரிசு, அனுஷா பாக்கியம், சுருதி, கார்த்திகா 2ம் பரிசு, விவேகானந்தா கல்லுாரி ஜீவித், ஜெயபிரகாஷ் 3ம் பரிசு வென்றனர்.

செயலாளர் இக்னேஷியஸ் மேரி வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆராய்ச்சி டீன் சியாமளா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us