ADDED : மே 20, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 'மாறிவரும் சமுதாயத்தில் மியூசியங்களின்எதிர்காலம்' என்னும் தலைப்பில் மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச மியூசிய தினம் நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர்நந்தாராவ் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி பேசுகையில் ''மியூசியம் எனும் சிந்தனை மேற்கத்திய நாட்டில் உருவானது என்றாலும் அவர்களையும் கவரும் வகையில் நம்முடைய மியூசியங்கள் உள்ளன. இதுகுறித்து ஆங்கில இலக்கியங்களில் நிறைய படைப்புகள் வந்துள்ளன'' என்றார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் ராமலிங்கம், இயற்கை வாழ்வியல் நிபுணர் தேவதாஸ் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார்.