sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கலந்தாய்வு முறையில் இடமாறுதல் ; தொழிலாளர் துறை ஊழியர் வலியுறுத்தல்

/

கலந்தாய்வு முறையில் இடமாறுதல் ; தொழிலாளர் துறை ஊழியர் வலியுறுத்தல்

கலந்தாய்வு முறையில் இடமாறுதல் ; தொழிலாளர் துறை ஊழியர் வலியுறுத்தல்

கலந்தாய்வு முறையில் இடமாறுதல் ; தொழிலாளர் துறை ஊழியர் வலியுறுத்தல்


ADDED : அக் 13, 2025 05:16 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'கலந்தாய்வு முறையில் ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்' என தொழிலாளர் துறை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர் துறை ஊழியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகி கண்ணகி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் பரமசிவன் துவக்கி வைத்து பேசினார். பணியிட மாறுதலை கலந்தாய்வு முறையில் நடத்தி இடமாறுதல் வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில் நேரடி உதவியாளர் பணிநியமன முறையை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுதோறும் அனைத்து பதவிகளிலும் தவறாமல் பட்டியல் வெளியிடப்பட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஓட்டுனர், காவலர், அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், வரைவாளர், லேப்டெக்னீசியன், அட்டெண்டர், முத்திரை கொல்லர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மகளிருக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், தொழிலாளர் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமுதவள்ளி, பொருளாளர் பார்த்தசாரதி, இணைப் பொதுச் செயலாளர் ரவி, துணைத் தலைவர் முத்துராஜா உட்பட பலர் பேசினர். துணைத் தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us