ADDED : நவ 27, 2024 05:12 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி : தொட்டப்பநாயக்கனுாரில் தி.மு.க., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நுாலகம் திறப்பு விழா நடந்தது.
மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு திறந்து வைத்தனர். உசிலம்பட்டி நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன், செல்லம்பட்டி முத்துராமன், சுதாகரன், சேடபட்டி ஜெயச்சந்திரன், செல்வபிரகாஷ், சங்கரபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், எழுமலை நகர் செயலாளர் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.
