sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்

/

வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்

வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்

வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்


ADDED : ஆக 29, 2011 12:36 AM

Google News

ADDED : ஆக 29, 2011 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடந்த குளறுபடிகள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

இம்மண்டலத் தலைவராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த இசக்கிமுத்து. இவர் மீது 'மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு, கடைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி, சுகாதாரப்பணியாளர்கள் நியமனத்தில் பாரபட்சம், பராமரிப்பு பணிகளில் பங்கீடு,' என குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததே, இசக்கிமுத்து மீதான புகாருக்கு காரணம். பாதிக்கப்பட்டவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். இந்த விபரங்களை சேகரிக்க போலீசார் மட்டுமே ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகமும் முன்வந்துள்ளது. இதன் மூலம் இசக்கிமுத்து மீது துறை ரீதியான நடவடிக்கையும் பாயும். இதேபோல் தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டல அலுவலக முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us