/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் நீதிமன்றத்தில்378 வழக்குகள் பைசல்
/
மக்கள் நீதிமன்றத்தில்378 வழக்குகள் பைசல்
ADDED : அக் 10, 2011 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா மக்கள் கோர்ட்
மாவட்ட தலைமை நீதிபதி ராஜசேகரன் (பொறுப்பு) தலைமையில் நடந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜகோபால், கனகசபாபதி, பரமேஸ்வரன் வழக்குகளை
விசாரித்தனர். நான்கு சிவில் வழக்குகள் உட்பட 378 வழக்குகள் பைசல்
செய்யப்பட்டன. இதில் 102 விபத்து வழக்குகளில் இரண்டு கோடியே 27 லட்சத்து
ஏழாயிரத்து 865 ரூபாயும், 125 செக் மோசடி வழக்குகளில் 36 லட்சத்து 31
ஆயிரம் ரூபாயும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டன. சார்பு நீதிபதி
ஆர்.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

