sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வயக்காட்டில் மக்காச்சோள விற்பனை

/

வயக்காட்டில் மக்காச்சோள விற்பனை

வயக்காட்டில் மக்காச்சோள விற்பனை

வயக்காட்டில் மக்காச்சோள விற்பனை


ADDED : ஜன 08, 2025 05:32 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் சேடப்பட்டி விவசாயிகளின் வயலில் விளைந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்த கையோடு விற்பனை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நீர்ப்பாசன வேளாண் மை நவீனமயமாக்கல் திட்டத்தின் தெற்காறு உபவடி பகுதியில் கொல்லம்பட்டி, சேடபட்டி விவசாயிகளுக்காக ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் கீழ் ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சேடப்பட்டி காளப்பன்பட்டி கிராம விவசாயிகள் பெரியகருப்பன், மைக்கேல்ராஜ், திருநாவுக்கரசு ஆகியோருக்கு இந்நிறுவனம் மூலம் மக்காச்சோள விதைகள், உரம், இடுபொருட்கள் விற்கப்பட்டன. தரமான விதைகளின் மூலம் போதுமான மகசூல் பெற்ற விவசாயிகளின் வயலில் மக்காச்சோள கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன.

இக்கதிர்களை வயலிலேயே நிறுவனம் மூலம் எடையிடப்பட்டு உரிய விலை தரப்பட்டது. மொத்தம் 12 டன் கதிர்கள் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மண்டி ஆய்வாளர் முகேஷ், மண்டி மதிப்பீட்டாளர் பிரசாத் மூலம் மக்காச்சோள கதிர்கள் அவர்களால் பண்ணை வாயில் முறையில் மக்காச்சோளம் விற்றுகொடுக்கப்பட்டதாக வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.

விற்பனையின் போது வேளாண் அலுவலர் மீனா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ரஞ்சித்குமார், இயக்குநர்கள் பாண்டிகுமார், திருநாவுக்கரசு, தேசிய வேளாண் நிறுவன விற்பனை நிபுணர் அருள்குமார், சி.இ.ஓ., தலைமை செயல் அலுவலர் கவிகரன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us