/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுற்றுலா ரயிலில் காஸ் சிலிண்டருடன் வந்தவர் கைது
/
சுற்றுலா ரயிலில் காஸ் சிலிண்டருடன் வந்தவர் கைது
ADDED : ஆக 17, 2025 02:14 AM

மதுரை:பயணியர் ரயிலில், மூன்று வணிக காஸ் சிலிண்டர்களை எடுத்து வந்த மும்பை நபர், ரயில்வே போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில், ஆர்.பி.எப்., போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 'பாரத் கவுரவ்' சிறப்பு ரயில் பெட்டி ஒன்றில், மூன்று வணிக காஸ் சிலிண்டர்கள் சாக்குப்பையால் மூடப்பட்டிருந்ததை கண்டனர்.
அங்கு, இரு அடுப்புகள், இரு பர்னர்கள், எரிவாயு குழாய்களும் இருந்தன. விசாரணையில் சுற்றுலாப் பயணியரை அழைத்து வந்த மும்பை ஹிதேஷ் ராம்ஜி, 47, சமையல் பயன்பாட்டிற்காக அவற்றை சட்ட விரோதமாக வைத்திருந்தது தெரிந்தது. திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் சுற்றுலா ரயில் ஒன்றில் இருந்த அவரை கைது செய்தனர்.
கடந்த 2023ல் மதுரை யார்டில் நின்ற ரயிலில், பயணியர் கவனக்குறைவாக சிலிண்டரை கையாண்டதில் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், 12 பேர் உடல் கருகி இறந்தது குறிப்பிடத்தக்கது.