sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனமகிழ் மன்றம் :உயர்நீதிமன்றம் தடை

/

மனமகிழ் மன்றம் :உயர்நீதிமன்றம் தடை

மனமகிழ் மன்றம் :உயர்நீதிமன்றம் தடை

மனமகிழ் மன்றம் :உயர்நீதிமன்றம் தடை


ADDED : நவ 08, 2025 02:08 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: வாடிப்பட்டி கோட்டைமேடு சுரேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

அலங்காநல்லுார் அருகே தண்டலையில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. அலங்காநல்லுார் ஒன்றிய பகுதியில் மதுபான கடை அமைக்கக்கூடாது என மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதை ஏற்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். தண்டலையில் கோயில், பள்ளி அமைந்துள்ள பகுதியில் மது விற்பனை செய்தால் இடையூறு ஏற்படும்.

மது விற்பனைக்கு உரிமம் வழங்கிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் ஆஜரானார்.

நீதிபதிகள் உரிமம் வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.






      Dinamalar
      Follow us