sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மனமகிழ் மன்றம்: உயர்நீதிமன்றம் தடை

/

மனமகிழ் மன்றம்: உயர்நீதிமன்றம் தடை

மனமகிழ் மன்றம்: உயர்நீதிமன்றம் தடை

மனமகிழ் மன்றம்: உயர்நீதிமன்றம் தடை


ADDED : ஆக 13, 2025 02:20 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் ராகவன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கோமதிபுரத்தில் தனியார் மனமகிழ் மன்றம் அமைக்க கட்டுமானப் பணி நடக்கிறது. அருகில் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. மனமகிழ் மன்றத்தில் மது அருந்துவோரால் மக்களுக்கு இடையூறு ஏற்படும். அதற்கு உரிமம் வழங்க மதுவிலக்கு மற்றும் கலால்துறை கமிஷனர், கலெக்டருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார்.

நீதிபதிகள், 'உரிமம் வழங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஆக.18 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது விற்பனை நடப்பது குறித்து பதிவுத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்றனர்.






      Dinamalar
      Follow us