ADDED : ஜன 26, 2025 04:44 AM
அ நிறம் | அளவு
மதுரை, : மதுரை காந்தி எனப்படும் என்.எம்.ஆர். சுப்பராமன் நினைவு தினம் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது.
செயலாளர் நந்தாராவ் பேசுகையில், ''தென்னிந்தியாவில் ஒரே காந்தி (மதுரை) மியூசியம் தொடங்க காரணமாக இருந்தவர் சுப்பராமன். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்திற்கு நிலங்களை தானமாக வழங்கினார்'' என்றார். கல்வி அலுவலர் நடராஜன், வளாக பொறுப்பாளர் நாகசுந்தரம் பங்கேற்றனர்.
