ADDED : அக் 22, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட முன்பதிவு, அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து பயணிகளிடம் அவர் விசாரித்தார். போக்குவரத்து கழக கோட்ட மேலாண்மை இயக்குநர் சரவணன், மதுரை மண்டல பொது மேலாளர் மணி, அதிகாரிகள் உடனிருந்தனர்.