UPDATED : ஜூலை 18, 2026 11:34 PM
ADDED : ஜூலை 18, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
மதுரை;தமிழகமெங்கும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரையில் மின்வாரிய அமைச்சர் நிர்மல்குமார் ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த நிறுவன ஊழியர்களும் பங்கேற்றனர். மின்வாரிய பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
