
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா திருமாலை சேர்ந்தவர் கொத்தனார் திருமுருகன் 24. மனைவி, 3 வயது மகன், 20 நாள் ஆண் குழந்தை உள்ளனர்.
3 நாட்களுக்கு முன்பு இப்பகுதி யில் நண்பர் களோடு மது குடித்தார். வீடு திரும்பாததால் கூடக் கோவில் போலீசில் மனைவி பானுமதி புகார் அளித்தார்.
இந்நிலையில் புதுப்பட்டி ரோட்டில் உள்ள புதர் அருகே திருமுருகனின் டூவீலர் நிற்பதை சிலர் பார்த்தனர்.
அவரை தேடிய போது பாழடைந்த துார்ந்து போன கிணற்றின் முன் பகுதியில் புதர்களுக்கு மத்தியில் தலைகீழாக இறந்து கிடந்தது தெரிந்தது.
கொலை செய்யப் பட்டாரா, தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.