ADDED : செப் 04, 2026 07:41 PM
மதுரை: மதுரையில் கனிமங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஏ.ஐ.எஸ்., 140 தரத்திலான ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி அதை செப்.30 க்குள் இணையதளத்தில் (http://mimas.tn.gov.in) பதிவு செய்து, அவ்விவரத்தை அனைத்து குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
மேலும் அனைத்து குவாரி கிரஷர் உரிமையாளர்கள் எடை மேடை அமைத்து அதன் விவரத்தையும் அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செப். 30 க்குப் பின்பு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி MIMAS Portal ல் ஒருங்கிணைப்பு செய்த வாகனங்களுக்கு மட்டுமே கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு, இடைமாற்றுச் சீட்டு வழங்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
