நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஊமச்சிக்குளம் ரோட்டில் சில நாட்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக கலெக்டரின் தலைமையில் இயங்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு தகவல் கிடைத்தது. செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உறவினர்கள் சோழவந்தான் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு விசாரித்தனர். மகள் சின்னத்தாய், பேரன் காளிமுத்து பற்றி தெரிய வந்தது. மூதாட்டியின் பெயர் முனியம்மாள் 82, கடந்த ஜனவரி முதல் காணாமல்போனதாகவும், அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்தனர். அவரை மகள் அழைத்துச் சென்றார்.

