sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : டிச 05, 2024 06:07 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையை அள்ளுங்க


மதுரை செல்லுார் கட்டபொம்மன் நகர் காமராஜர் 2வது தெருவில் டன் கணக்கில் குப்பை சிதறியுள்ளது. துாய்மைப் பணியாளர்கள் சரிவர குப்பையை அகற்றுவதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமமூர்த்தி, பி.பி.குளம்

நிரம்பிய சாக்கடை


மதுரை எஸ்.பி.ஐ., ஆபிசர்ஸ் காலனியில் ரோட்டில் பாதாள சாக்கடை நிரம்பி ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் ஏற்படுவதால் அப்பகுதி வழியாக செல்வோர் முகம் சுளிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உதயகுமார், பைபாஸ் ரோடு.

சாக்கடைக்குள் செல்லுார்


மதுரை செல்லுார் மேலத்தோப்பில் பாதாள சாக்கடை அடைப்பால் இரண்டு மாதமாக அப்பகுதி முழுவதையும் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. துர்நாற்றத்துடன் காலரா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாணிக்கம், செல்லுார்

பள்ளத்தை சரி செய்யுங்க


மாநகராட்சி மண்டலம் 2, 35வது வார்டு அண்ணாநகர் 80 அடி ரோட்டில் லோடு மேன் சங்கம் எதிரே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் அதிகாலையில் நடந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரமேஷ், அண்ணாநகர்.

காவு வாங்கும் ரோடுகள்


மாநகராட்சி கூடல்புதுார் பகுதிகளில் 8 மாதங்களுக்கு முன் அவசரகதியில் அமைத்த தார் ரோடுகள் தற்போது போக்குவரத்திற்கு தகுதியற்று உயிரை காவு வாங்கும் நிலையில் உள்ளது. ஆனையூர், ஆலங்குளம் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தரமான தார் ரோடு அமைக்க வேண்டும்.

- பாண்டி, கூடல்புதுார்.

குவிந்த குப்பை


மாநகராட்சி திருநகர் 7 வது ஸ்டாப், காந்திஜி 7 வது குறுக்குத் தெரு ஆவின் பூத் அருகே குப்பை குவிந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உண்கின்றன. புகார் அளித்தும் குப்பை அகற்றப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரம்யா, திருநகர்.






      Dinamalar
      Follow us