sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : செப் 18, 2025 06:10 AM

Google News

ADDED : செப் 18, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்கும் கழிவுகள்

மதுரை ஆலங்குளம் பாரதி நகர் பகுதியில் கழிவுகளை ரோட்டில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. அவற்றை உடனே அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெயராமன், ஆலங்குளம்.

மூடப்படாத பள்ளம்

ஒத்தக்கடை வேலம்மாள் நகரில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்கள் பல மாதங்களாக மூடப்படவில்லை. சிறுவர்கள், பெரியவர்கள் ரோட்டைக் கடக்க சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- துரைசாமி, ஒத்தக்கடை.

தெருநாய் தொல்லை

மதுரை எஸ்.எஸ்.காலனி ஜவகர் மெயின் ரோடு, அவென்யூ, ஜவகர் நகர் 2வது தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.காலனி.

போக்குவரத்து நெரிசல்

தெப்பக்குளம் பாண்டியன் நகர் அருகே டிராபிக் சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் பார்க் செய்வதால் பலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுவர்ணா, தெப்பக்குளம்.

சுகாதாரக்கேடான கால்வாய்

மதுரை செல்லுார் காமராஜர் தெரு சந்திப்பு பகுதியில் உள்ள பந்தல்குடி மழைநீர் கால்வாயில் குப்பையை கொட்டி அசுத்தப்படுத்துகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதாரக் கேட்டிற்கு உள்ளகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கரபாண்டியன், செல்லுார்.

சேதமான ரோடு

மதுரை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் கட்சி நிகழ்ச்சிகளுக்காக கொடிகளை நடுவோர் ரோட்டை சேதப்படுத்தி விடுகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிதம்பரம், தல்லாகுளம்.

ரோடு ஆக்கிரமிப்பு

மதுரை தென்கரை ரோட்டின் இருபுறமும் வாகனங்களை பார்க் செய்து ஆக்கிரமிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. சில இடங்களில் கால்நடை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நீலகண்டன், கீழவாசல்.

சமூக விரோதிகள் நடமாட்டம்

மதுரை குருவிக்காரன் சாலை பாலத்தின் கீழ் இரவில் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உதயா, கீழவாசல்.






      Dinamalar
      Follow us