sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெங்காய மார்க்கெட் கட்டுமான பணி ஆய்வு

/

வெங்காய மார்க்கெட் கட்டுமான பணி ஆய்வு

வெங்காய மார்க்கெட் கட்டுமான பணி ஆய்வு

வெங்காய மார்க்கெட் கட்டுமான பணி ஆய்வு


ADDED : பிப் 09, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயை அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் மாநகராட்சியில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் கண்மாய் படுகையை பலப்படுத்துதல், படகு சவாரி அமைத்தல், கண்மாயின் மேற்கு, வடக்கு பகுதியில் சைக்கிளிங் பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை அமைத்தல், யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, நுாலகம், குழந்தைகள், முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஆம்பி தியேட்டர், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுபந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

இவற்றை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து வார்டு 33 சார்பில் மாட்டுத்தாவணி அருகில் ரூ.10.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெங்காய மார்க்கெட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, உதவி கமிஷனர் மணியன், பி.ஆர்.ஓ. மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், காமராஜ், உதவி பொறியாளர்கள் அமர்தீப், கண்ணன், கவுன்சிலர் மாலதி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us