sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'ஓவர் லோடு' லாரிகளால் விபத்து அபாயம்

/

 'ஓவர் லோடு' லாரிகளால் விபத்து அபாயம்

 'ஓவர் லோடு' லாரிகளால் விபத்து அபாயம்

 'ஓவர் லோடு' லாரிகளால் விபத்து அபாயம்


ADDED : நவ 24, 2025 06:18 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளான மாணிக்கம்பட்டி, பள்ளபட்டி, மறவபட்டி, வலையபட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மண், கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து லாரிகள் மூலமாக ஜல்லி, எம்-சாண்ட், கருங்கற்கள் கட்டுமான பணிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து லாரிகள் மூலமாக அதிகப்படியான பாரங்கள் ஏற்றிசெல்வது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. லாரியில் எம் -சாண்ட் எடுத்து செல்லும் போது தார்ப்பாய் மூடாமல் செல்வதால் காற்றில் துாசு பறக்கிறது. லாரிகளை பின்தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

லாரி பிரேக் அடிக்கும் போது, வேகத்தடைகளில் ஏறி இறங்கும்போது கற்கள், மண் கட்டிகள் ரோட்டில் விழுகிறது. இது பிற வாகனங்களை குறிப்பாக டூவீலர்களை விபத்தில் சிக்க வைக்கிறது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us