sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

/

உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி


ADDED : மே 25, 2025 12:15 PM

Google News

ADDED : மே 25, 2025 12:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோயில் போன்ற அமைப்பில், நாம சங்கீர்த்தனத்துடன், 'மதுரையில் பண்டரி' நிகழ்வு, 5 நாட்கள் நடக்க இருக்கிறது.

மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தில், இந்த நிகழ்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பகவான் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர் வரவேற்றார். மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், அழைப்பிதழின் பிரதியை வெளியிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு வழங்கினார்.

ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பேட்டி


அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது;

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல புண்ணிய தலங்கள் நாட்டில் உள்ளன. எல்லோரும் எல்லா இடத்திற்கும் சென்று தரிசிக்க முடிவதில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் பக்தர்களுக்கு தரிசனம் தர, பண்டரிநாதன் இங்கே எழுந்தருள வருகிறார்.

ரிஷிகேஷ், பத்ராச்சலம், அயோத்தி, பூரி, உடுப்பி, துவராகா, மதுரா உட்பட பல தலங்களைத் தொடர்ந்து, 'மதுரையில் பண்டரி' நிகழ்ச்சி, 5 நாட்கள் நடக்கிறது.

பகவான் நாம பிரச்சார மண்டலி சார்பில், லட்சுமி சுந்தரம் ஹாலில் இந் நிகழ்வு, மே 28ஆம் தேதி தொடங்குகிறது. பண்டரிபுரம், பாண்டுரங்கன் ருக்மணி கோயில போலவே செட் அமைத்து தினமும் அந்தக் கோயிலில் நடைபெறுவதைப் போலவே பூஜைகள் நடக்க உள்ளன. பண்டரிபுரம் கோயிலில் பூஜை செய்யும் பூஜகர்களே, இங்கும் அதே முறையில் பூஜைகள் செய்யவுள்ளனர்.

தினமும் பாகவத இசையோடு பகவான் நாம சங்கீர்த்தனமும் நடக்க இருக்கிறது. இதில், நாடு முழுவதும் இருந்து, பிரபலமான 100 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். முதல் நாளில் மகாசண்டி யாகம், மீனாட்சி திருக்கல்யாணம், 108 கன்னியா பூஜை, சுமங்கலி பூஜையோடு விசேஷ சாளக்கிராம பூஜையும் நடக்க இருக்கிறது.

நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 1008 சாளக்கிராமங்களை வைத்து பூஜை செய்து, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க இருக்கிறார்கள். வேத பாராயணம், ருத்ர பாராயணம், ஸஹஸ்ரநாம பாராயணங்களும் நடக்க இருக்கிறது.

இந்தநிகழ்வில் மருதாநல்லூர் சத்குரு ஸ்ரீ கோதண்டராம சுவாமிகள், பிலாஸ்பூர் ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், விசாகப்பட்டினம் சௌபாக்கிய புவனேஸ்வரி பீடம் ராமானந்த பாரதி மகாசுவாமிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பல துறவிகள், பாகவதர்கள், பக்தர்கள் பங்கேற்கின்றனர். தினமும் அன்னதானம் உண்டு'

இவ்வாறு அவர் கூறினார்.

பகவான் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர், பொருளாளர் விஸ்வநாதன், கமிட்டி உறுப்பினர்கள் விஜயகுமார், வைத்தியநாதன், ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி பீடம் பரத், பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us