sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் சுரங்கப்பாதை எப்போது அமைப்பார்கள் எதிர்பார்ப்பில் மக்கள்

/

குன்றத்தில் சுரங்கப்பாதை எப்போது அமைப்பார்கள் எதிர்பார்ப்பில் மக்கள்

குன்றத்தில் சுரங்கப்பாதை எப்போது அமைப்பார்கள் எதிர்பார்ப்பில் மக்கள்

குன்றத்தில் சுரங்கப்பாதை எப்போது அமைப்பார்கள் எதிர்பார்ப்பில் மக்கள்


ADDED : ஏப் 20, 2025 04:04 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து எந்த முயற்சியும் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஸ்டேஷன் அருகே இருந்த ரயில்வே கேட் ரோட்டை பாலாஜி நகர், பாலசுப்பிரமணிய நகர், ஹார்விபட்டி, சந்திராபாளையம் பகுதி மக்கள் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட போது பாதுகாப்பு கருதி நிரந்தர இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் மேம்பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என சர்வ கட்சியினர், வணிகர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தை திருமங்கலம் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து ரயில்வே பொறியாளர்களிடமும் ஆலோசனை நடத்தினார். சுரங்கப்பாதை உடனடியாக அமைக்க முடியாது. அமைக்கும் வரை அடைக்கப்பட்ட ஒரு பகுதியை திறந்து விடுமாறு அறிவுறுத்தினார். மாணிக்கம் தாகூர் எம்.பி., ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சருக்கும் கடிதம் எழுதினர். எந்த முயற்சியும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எப்போதுதான் குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்போகிறார்களோ.






      Dinamalar
      Follow us