sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலிக்கு அனுமதி கூடாது கலெக்டரிடம் மனு

/

திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலிக்கு அனுமதி கூடாது கலெக்டரிடம் மனு

திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலிக்கு அனுமதி கூடாது கலெக்டரிடம் மனு

திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலிக்கு அனுமதி கூடாது கலெக்டரிடம் மனு


ADDED : ஜன 30, 2025 05:35 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது'' என மதுரை கலெக்டர் சங்கீதாவிடம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள அ.ம.மு.க., த.மா.க., புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, அ.தி.மு.க., சார்பில் கட்சி நிர்வாகிகள் மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: திருப்பரங்குன்றம் மலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான, சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு புனித தலம். இம்மலையில் சைவ கடவுளான விநாயகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல குகை கோயில்கள், சிவன் கோயில்கள் உள்ளன.

மலையைச் சுற்றி பல சைவ சமய கோயில்கள் உள்ளன. இங்கு மிருகவதை உயிர்ப்பலி கொடுப்பது சைவ சமய இறையாண்மைக்கு எதிரானது. நாங்கள் பூர்வீகமாக பல நுாற்றாண்டுகளாக இங்கு வாழ்கிறோம். இதுவரை இதுபோன்ற நிகழ்வுகள் இங்கு நடந்ததில்லை.

புதிதாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், இது ஹிந்து பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயலாக அமையும்.

மேலும் இங்கு வம்சா வழியாக வாழ்ந்து வரும் கிராம மக்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமையை குலைக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே இங்குள்ள மக்களின் நல்லிணக்கத்தை பாதுகாக்க மிருக உயிர்ப்பலி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us