ADDED : ஆக 14, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமார் போலீசார் தாக்கியதில் இறந்தார். போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர்.
வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. கண்ணன் உட்பட 5 போலீசாரை ஆக.13 வரை காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் ஜூலை 30 ல் உத்தரவிட்டது. நேற்று காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆக.26 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.

