கோயிலில் திருட்டு பேரையூர்: திருமங்கலம் தாலுகா எம்.மேட்டுப்பட்டி மந்தை அம்மன்கோயிலில் அதிகாலையில் மர்ம நபர்கள் சி.சி.டி.வி., கேமராகள், மைக் செட், ஆம்ப்ளிபயர், எலக்ட்ரிக்பெல் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். பூஜாரி காசி புகாரில் நாகையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவரிடம் அலைபேசி பறிப்பு பேரையூர்: கே.பாப்புநாயக்கன்பட்டி நாகராஜ் 32. டி.குன்னத்துார் தனியார் மில் வேன் டிரைவர். அக்.5 ல் மில்லில் வேலை செய்த பணியாளர்களை வேனில் அழைத்து சின்னாரெட்டிபட்டியில் அவர்களின் வீடுகளில் இரவு 12:30 மணிக்கு இறக்கி விட்டார். பின்பு டி.கல்லுப்பட்டி நோக்கி சென்றார். அப்போது 4 டூவீலர்களில் வந்த வன்னிவேலம்பட்டி மலிங்கா, சின்னாரெட்டிபட்டி மாரியப்பன், கோபால் உள்ளிட்ட 8 பேர் வேனை மறித்தனர். பின் நாகராஜை பட்டா கத்தியால் தாக்கி, அவரது அலைபேசியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கினர்.