sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 போலீஸ் செய்திகள்...

/

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...


ADDED : டிச 06, 2025 10:15 AM

Google News

ADDED : டிச 06, 2025 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணிடம் மோசடி: இளைஞர் கைது மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் லாடனேந்தலைச் சேர்ந்தவர் மஞ்சுளா 53. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். இளைஞர் ஒருவர், அவரிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார்.

அதை நம்பி ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார். வீட்டிற்கு வந்த பின் பார்த்தபோது, பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் கூடுதலாக பணம் எடுத்தது தெரிந்தது. சந்தேகமடைந்து ஏ.டி.எம்., கார்டை பார்த்தபோது அது போலியானது என தெரிந்தது. மாட்டுத்தாவணி போலீசில் அவர் புகார் அளித்தார். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட வில்லாபுரம் சபரி கிருஷ்ணனை 33, போலீசார் கைது செய்தனர்.

40 பேர் கைது மதுரை: ஒத்தக்கடையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நீதிபதியை கண்டித்து சிலர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் மறுக்கவே, அவர்களில் 10 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர்.

-- மதுவிற்ற பள்ளி --------------------------ஊழியர் கைது

திருமங்கலம்: உசிலம்பட்டி அருகே கருகட்டான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி ஊழியர் சுரேஷ்குமார் 50. வேலுாரைச் சேர்ந்த இவர், உசிலம்பட்டியில் குடியிருக்கிறார். இவர் பாண்டிச்சேரியில் மது பாட்டில் வாங்கி உசிலம்பட்டியில் விற்பதாக தகவல் பரவியது. மதுரை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிக் குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன் உட்பட போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ்குமார் மது விற்றது தெரிந்தது. அவரது வீட்டை சோதனையிட்டு, 27 மது பாட்டில்களை கைப்பற்றினர். அவரை கைது செய்த போலீசார் திருமங்கலம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us