நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாக்குடியில் உள்ள கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயில் முதலாமாண்டு பொங்கல் திருவிழா நடந்தது. ஜூலை 2 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், ஜூலை 11 காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலையில் பொங்கல் வைத்து சிறப்பு ஆராதனைநடந்தது.
இரண்டாம் நாள் காலை பால்குடம் எடுத்தல், அன்னதானம், இரவில் மாவிளக்கு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மூன்றாம் நாளில் குத்துவிளக்கு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.