sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றம் மலையில் கிடா வெட்ட அனுமதி மறுப்பு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

/

திருப்பரங்குன்றம் மலையில் கிடா வெட்ட அனுமதி மறுப்பு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

திருப்பரங்குன்றம் மலையில் கிடா வெட்ட அனுமதி மறுப்பு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

திருப்பரங்குன்றம் மலையில் கிடா வெட்ட அனுமதி மறுப்பு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது


ADDED : டிச 26, 2024 06:56 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தர்காவில் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்த ஆடு, கோழிகளுடன் சென்றவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்

ராஜபாளையம் மல்லடிப்பட்டியை சேர்ந்த சையது அபுதாஹிர் 53. குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக ஒரு ஆடு, இரண்டு சேவல்களுடன் வந்தார்.

மலை அடிவாரத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஆடு, சேவல்களை மலைமேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனக் கூறினர்.

அவர்களுக்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மலை படிக்கட்டுகள் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ் உதவி கமிஷனர்கள் குருசாமி, கணேசன், சீதாராமன், ஆர்.டி.ஓ. கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'தாங்கள் பல ஆண்டுகளாக தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி, ஆடு, சேவல்கள் படைத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம்'' என்றனர்.

''ஆடு, கோழிகளை கொண்டு செல்ல அனுமதிக்க இயலாது. இது சம்பந்தமாக மனு தாருங்கள். அரசிடம் அனுப்பி முடிவு செய்யப்படும்'' என ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஆடு, சேவல்கள் கொண்டு வந்தோர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மதியம் 2:30 மணிக்கு அவர்களை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us