sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொதுமக்களோடு ரோடு மறியல் ;உதயகுமார் உட்பட 65 பேர் கைது

/

பொதுமக்களோடு ரோடு மறியல் ;உதயகுமார் உட்பட 65 பேர் கைது

பொதுமக்களோடு ரோடு மறியல் ;உதயகுமார் உட்பட 65 பேர் கைது

பொதுமக்களோடு ரோடு மறியல் ;உதயகுமார் உட்பட 65 பேர் கைது


ADDED : ஜன 31, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்; திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் முடியும் இடத்தில் நான்குவழிச்சாலை அண்டர்பாஸ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களுடன் மறியலில் ஈடுபட்ட சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடக்கிறது. ஆலம்பட்டி அருகே சேடப்பட்டி ரோட்டில் அண்டர் பாஸ் பாலம் ஊரின் மையப்பகுதியில் அமைகிறது. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட துாரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும் என்பதால் ஆலம்பட்டியில் முடியும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.

நேற்று காலை ஆலம்பட்டியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து உதயகுமார் கட்சியினரோடு கலந்து கொண்டார். 4 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. திருமங்கலம் ஆர்.டி.ஓ., ராஜகுரு, ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர், தாசில்தார் மனேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாததால் உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேன் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 64 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us